×

நெல்லை அரசு மருத்துவமனையில் நாங்குநேரி மாணவருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல்

நெல்லை, அக். 27: நாங்குநேரியில் சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிளஸ் 2 மாணவர் சின்னத்துரையை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார். நாங்குநேரி பெருந்துறையை சேர்ந்த அம்பிகா-முனியாண்டி தம்பதியின் குழந்தைகளான பிளஸ் 2 மாணவர் சின்னத்துரை (17), 10ம் வகுப்பு படித்து வரும் அவரது தங்கை சந்தான செல்வி (15) ஆகிய இருவரும், கடந்த ஆக.9ம் தேதி வீட்டில் இருந்த போது சக மாணவர்கள் திடீரென வீடு புகுந்து அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய மாணவர் சின்னத்துரை, அவரது தங்கை சந்தான செல்வி ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சின்னத்துரைக்கு சென்னையிலிருந்து வந்த டாக்டர்கள் குழுவினர் நவீன சிகிச்சை அளித்தனர். சின்னத்துரை தொடர்ந்து அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று நெல்லை வந்த தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாணவர் சின்னத்துரையை நெல்லை அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

The post நெல்லை அரசு மருத்துவமனையில் நாங்குநேரி மாணவருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Anil Mahes ,Nella Government Hospital ,Rice ,Mahes ,Nanguneri ,Nellu Government Hospital ,Dinakaran ,
× RELATED பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக...